Friday, 29 March 2013

மலிவு விலை உணவகங்கள்

சென்னை மாநகராட்சியில் மேலும் 127 மலிவு விலை உணவகங்களை திறந்து வைக்கப்பட உள்ளன. சென்னை மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் மலிவு விலை உணவகங்கள் திறக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்நார். இதன் அடிப்படையில் 73 வார்டுகளில் மலிவு விலை உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த உணவகங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், எஞ்சியுள்ள 127 வார்டுகளிலும் மலிவு விலை உணவகங்களை திறக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கான பணிகள் பெருமளவில் முடிந்து விட்டது. இந்த உணவகங்கள் வரும் ஏப்ரல் 2ம் தேதி திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உணவகங்களை முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் முறையில் திறந்து வைக்க உள்ளார்.

No comments:

Post a Comment