Friday, 29 March 2013

தேர்வில் வெற்றி பெற்று அரசாங்க உதவியை பெறுவது எப்படி?


மாணவர்களை சரியான நேரத்தில் சரியான புத்திமதிகள் சொன்னால் உடனே பதிந்து விடும். இப்பொழுது தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் மதிப்பெண்கள் அதிகமாக எடுத்தால் உயர்கல்விக்கு அரசாங்கமே நிறைய உதவிகள் செய்ய காத்துக்கொண்டிருக்கிறது. அதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள சரியான தருணம் இது.

2010 +2 தேர்வில் 80% மதிப்பெண் எடுத்து இந்த ஆண்டு 2010- ல் பட்ட படிப்பு ( BA /B.Sc/ B.E/ B.Tech/ B.Com/ BBA/ B.Pharm/ B.Arch etc...) சேர்ந்த மாணவர்களுக்கு மாதம் ரூ 1,000 மத்திய அரசால் வழங்ப்படுகின்றது   ( முதுகலை ( Master Degree) படிக்கும் போது மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்).   2009 மற்றும் அதற்க்கு முன்னர் தேர்சி பெற்றவர்களுக்கு இந்த உதவி தொகை கிடைக்காது.  இது 2010- ல் 80 % மதிப்பெண் எடுத்தவர்களுக்கு மட்டுமே. இந்த உதவி தொகை. தமிழகத்தில் மொத்தம்  4883 மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 4,50,000- க்கு குறைவாக இருக்க வேண்டும்.

மாணவர்கள் இந்த இணையதளத்திற்கு http://www.tn.gov.in/dge/scholarship/login.php   சென்று தங்களுடைய + 2 தேர்வு பதிவு எண்ணை ( Registration Number) சமர்பிக்கவேண்டும் தங்களுடைய மதிப்பெண்ணை சரிபார்த்து 80% சதவீதத்திற்க்கு மேல் இருந்தால் விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்யலாம். நவம்பர் 12- ஆம் தேதி வரைதான் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்ய முடியும்   . பூர்த்தி செய்து அனுப்ப கடைசி தேதி நவம்பர் 16.

உடன் சமர்பிக்க வேண்டிய சான்றிதழ்கள்

1. சாதி சான்றிதழ்
2. வருமான சான்றிதழ்
3. +2 மதிப்பெண் சான்றிதழ்

பூர்தி செய்யப்ப்பட்ட விண்ணப்பத்தை   அனுப்ப வேண்டிய முகவரி

இணை இயக்குனர் ( மேல் நிலை)
அரசு தேர்வுகள் இயக்ககம்
DPI. வளாகம் , கல்லூரி சாலை
சென்னை - 600006.

No comments:

Post a Comment