Friday, 29 March 2013

வெற்றிக்கான மந்திரச் சொல்....

நீங்கள் செய்ய விரும்புகிற காரியங்களில் மற்றவர்களின் ஒத்துழைப்பு வேண்டும்

என்று நீங்கள் விரும்பினால், அவர்களுக்கு உங்களுடைய ஒத்துழைப்பை முதலில்

கொடுங்கள். எந்த தொல்லை, எந்தப் பிரச்சனை ஆனாலும் அதைச்

சமாளிப்பதற்கான வழி, முதலில் நீங்கள் அதற்குத் தயாராக இருப்பதுதான். நம்மை

மற்றவர்கள் ஏற்க வேண்டும் என்று கருதினால், பிறர் ஏற்கத்தக்க வகையில் நாம்

நம்மை முதலில் ஆக்கிக்கொள்ள வேண்டும். சிக்கல் நிறைந்த பிரச்சனைகளைத்

தீர்க்க வேண்டுமெனில், அவற்றைப் பகுதிகளாக பிரித்து முதலில் அவற்றை

எளிமையாக்கிக் கொள்ள வேண்டும். நாம் எதிலும் நீடித்திருக்க விரும்பினால்,

நடைமுறையில் உள்ள சுற்றுச்சூழலுக்கு ஏற்ப முதலில் நம்மை சரிசெய்து கொள்ள

வேண்டும். மற்றவர்களை வெற்றி கொள்ள முதலில் அவர்களைப் பாராட்டுங்கள்,

ரசியுங்கள், முக்கியமானவர்களாக கருதுங்கள். அவர்கள் தேவைப்படுகிறவர்கள்

என்ற உணர்வை ஏற்படுத்துங்கள். முதலில் தோல்விகளில் இருந்து பாடம்  கற்றுக்

கொள்ளவும். தோல்வியே வெற்றிப்படிகள் தோல்விகள் என்பது ஒரு பாடம், அவை

இழிவு அல்ல. வெற்றி பெறுவதற்கெல்லாம் முதல் படியாக நீங்கள் முதலில் நம்பிக்கை

கொள்ள வேண்டும். பிறகு கடின உழைப்பும் மேற்கொள்ள வேண்டும். அதுவும்

தொடர்ந்து இருக்க வேண்டும். உங்களுடைய ஆழ்மன விருப்பங்களை உள்

மனத்தின் அளவற்ற சக்தி மூலமாக நடைமுறைக்குக் கொண்டு வர நிங்கள்

விரும்பினால் முதலில் அதை இரண்டு வினாடி லட்சியக் கட்டளைகளாக உள் மனதில்

பதிய வைத்து விடுங்கள். ஒவ்வொரு நாளும் பல முறைகள் அதை ஜெயிக்க

வேண்டும். முதலில் எது அச்சத்தை எற்படுத்துகிறதோ அதை வலுக்கட்டாயமாகச்

செய்ய வேண்டும். மற்றவர்களிடம் உள்ள வல்லமையைப் பெற அல்லது பயன்

படுத்திக்கொள்ள முதலில் அவர்களுடைய உள் மனத்தின் விருப்பங்களை நிறைவு

செய்யுங்கள்.  அல்லது உதவி செய்யுங்கள். நீங்கள் வெற்றிப்றெ விரும்பினால்,

முதலில் வெற்றி  பெற்றவரைப் போன்று சிந்தித்து உணர்ந்து செயல்படுங்கள்.

மற்றவர்கள் பெறவிரும்பினால் முதலில் உங்கள் நல்லெண்ணத்தை

மற்றவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். மற்ற நண்பர்களைக் கவர்ந்திட நீங்கள்

விரும்பினால், உங்கள் நட்பை முதலில் மற்றவர்களுக்கு வழங்க வேண்டும் உங்களை

பிறர் நேசிக்க வேண்டும் என்றால் முதலில் மற்றவர்களை நீங்கள் நேசிக்க வேண்டும்

No comments:

Post a Comment