Friday, 29 March 2013

பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க


பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய மக்களில் ஒரு பகுதியினர்

தயாராகிவிட்டனர். கொலை, கொள்ளை, ஏமாற்றுதல் ஆகியவற்றின் பெயரால்

அவர்கள் தங்களை உயர்த்திக் கொள்ள நினைக்கின்றனர். பணம் இருந்தால் எல்லாம்

நடந்துவிடும் என்று நினைக்கின்றார்கள். பணக்காரர்களின் வாழ்க்கையைப் பார்த்து,

அதில் மயங்கி, தங்களையும் பணக்காரர்களாக்கிக் கொள்ள துடிக்கிறார்கள்.
படிப்பவர்களும் கூட சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர்.

அப்படி சம்பாதிக்கும் பணத்தில் மார்க்க விதிகளுக்க மாறாக, குடி, விபச்சாரம்

போன்ற தடுக்கப்பட்ட வழிகளில் செல்கிறார்கள். காதல் என்ற போதையில் சிக்கி,

தங்களை தாங்களே சீரழித்துக் கொள்கிறார்கள். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில்

அதிக கவனம் செலுத்துகிறார்கள். கம்ப்யூட்டர் கல்வியை சாட்டிங் என்ற பெயரில்

சீரழிவு சாதனமாக மாற்றிக் கொள்கிறார்கள். இறுதியில், பல நோய்களுக்க

ஆளானபிறகு, இறைவா என்னை சோதித்து விட்டாயே என்று கதறுகிறார்கள்.

பணத்தால் தான் குழப்பங்கள் ஏற்படுகின்றன என்பதும், மனிதர்கள் தங்களைத்

தாங்களே அழித்துக் கொண்டு, துன்பம் வரும்போது, இறைவன் மீது பழி

போடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளன. பணத்தின்மீதான பாசத்தைக்

குறைத்துக்கொண்டால், பல பிரச்சனைகளில் இருந்து தப்பிவிடலாம். பணம்

வாழ்க்கைக்குத் தேவைதான். வாழ்க்கையே பணமயமாக இருக்க வேண்டாமே.

No comments:

Post a Comment